பிறந்து 14 நாளேயான குழந்தை பலி

224 0
பிறந்து 14நாள் குழந்தைக்கு வழங்கிய மருந்து வில்லையே குழந்தையின் உயிர் இழப்பிற்கு காரணமாக அமைந்ததாக தாயார் மரண விசாரணையின்போது தெரிவித்தார்.
மாவிட்டபுரம் நல்லிணக்க புரத்தில் வசிக்கும் 23 வயது தயாரிற்கு ஓர்  ஆண் குழந்தை 8 மாதத்தினில் பிறந்துள்ளது. இருப்பினும் குழந்தை சுகதேகியாகவே காணப்பட்டது. இருப்பினும் 8 மாதத்தில்  பிறந்த குழந்தைக்கென பீகோ மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாயாருக்கும் குருதி அழுத்தம் இருந்தமையினால் அவருக்கும் மாத்திரை வழங்கப்பட்டிருந்த்து. இவை இரண்டும் ஒரே நிறத்திலானவையாகவும் காணப்பட்டுள்ளது. இதே நேரம் இடம்பெயர்ந்து முகாம்களில் மட்டுமே வாழ்ந்த குறித்த தாயார் கல்விக்கூடமே செல்லவில்லை எனவும் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில் கடந்த 13ம் திகதி மாலையில் குழந்தையின் தந்தை கடற்றொழிலுக்குச் சென்றிருந்த சமயம் தாயாருடன்  இருந்த குழந்தை மருந்து பருக்கியுள்ளரா். இருப்பினும் நேற்று முன் தினம் அதிகாலை 3 மணியளவில் குழந்தை மூச்சு விட சிரம்ப்படுவதனை அவதானித்த தாயார் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது