கொழும்பில் பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையே மோதல் – பலர் மருத்துவமனையில்

304 0

கொழும்பு ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரி மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் கொழும்பு தேசிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் 15 மாணவர்களை மருதானை மற்றும் பொரளை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு டீ.எஸ் சேனாநாயக்க கல்லூரியில், இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூன்று பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.