அகரஹாரா சிறை வளாகத்தில் பதற்றம், பரபரப்பு – காவல்துறை தடியடி

340 0

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

மேலும், மூன்று பேரும் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் சரணடைய கூடுதல் நேரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர் முறையிட்டனர். ஆனால், சசிகலாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதனால், சசிகலா உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் எனக் கருதிய நீதிபதிகள், பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதியின் முன் சரணடைய உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இன்று பிற்பகல் சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு வந்த சசிகலா மாலை 5.15 மணியளவில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரண் அடைந்தார்.

முன்னதாக நீதிபதி அஷ்வந்த் நாராயணா அமர்ந்திருந்த அறையின் அருகே சசிகலாவின் கணவர் நடராஜன், அதிமுக எம்.பி தம்பிதுரை ஆகியோர் காத்திருந்தனர்.

நீதிபதி முன் ஆஜரான ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகள் சுதாகரன் சார்பில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், சசிகலாவின் உடைகளை கொண்டு சென்ற காரின் மீது பர்ப்பன அகரஹாரா சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மொத்தம் இரண்டு கார்களின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன.

நிலைமை மேலும் மோசம் அடையவிடாமல் கர்நாடக காவல்துறை தடியடி நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.