பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்று கொள்ளும் இறுதி நாள் அறிவிப்பு

349 0
2016-2017 ஆம் கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழகங்களுக்கு  மாணவர்களை  இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார.
பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
அதேநேரம், மேன் முறையீடுகளை சமர்ப்பிப்பதன் மூலம் மாணவர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
இதேவேளை உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீளத் திருத்தும் போது முன்பை விட சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் பட்சத்தில், எந்த மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணைக்குழு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.