100 வீரவங்சக்கள் உருவாகி வருவார்கள் : பிரசன்ன ரணதுங்க

247 0

ஒரு வீரவங்சவின் குரலை அடக்கும் போது 100 வீரவங்சக்கள் உருவாகி வருவார்கள் என்பதை தற்போதைய அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அழுத்தங்களை கொடுத்து விமல் வீரவங்ச வாகனங்களை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைத்துள்ளது.

பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால், அதற்கு பிரதியமைச்சராக பதவி வகித்த லசந்த அழகியவண்ண நேரடியாக பொறுப்புக் கூறவேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்கவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படவில்லை. அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில்லை.

ஒரு வீரவங்சவின் குரலை அடக்கும் போது 100 வீரவங்சவினர் உருவாகி வருவார்கள் எனவும் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.