கோப் குழுவின் புதிய விசாரணை

325 0

SUNILஇலங்கை கிரிக்கட் சபை, இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம், தேசிய லொத்தர் சபை என்பவற்றை கோப் குழுவின் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இவர்கள் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கிரிக்கட் சபை மட்டுமல்லாது இலங்கை காற்பந்து சம்மேளனத்தையும் விசாரணைக்குட்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விளையாட்டுத்துறை தொடர்பான சட்டங்களின் படி விளையாட்டு கழகங்களை விசாரணை செய்யும் அதிகாரம் தமக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.