250 வாகனங்கள் பயன்படுத்தப்படாத போதிலும் மாத வாடகை வழங்கப்பட்டுள்ளது

98 0

அரச நிறுவனங்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 250 வாகனங்கள் எரிபொருள் இன்மை காரணமாக பயன்படுத்தப்படாது தரித்து வைக்கப்பட்டிருந்த போதிலும் அவற்றுக்கு மாத வாடகை செலுத்தப்பட்டுள்ளதாக சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்தவொரு அரச நிறுவனத்திற்கு 10 வாகனங்கள் வரையில் வாடகைக்கு பெற முடியும் என்பதுடன், வாகனமொன்றிற்கு  மாத வாட‍கையாக இலட்சம் ரூபா செலுத்தப்பட வேண்டும்.

நாட்டில் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, செலவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும்,  அவற்றை சில அரச நிறுவனங்கள் அசட்டை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்டுகிறது.