எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானம்

122 0

அடையாளம் காணப்பட்ட சில விசேட பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த விஷேட பிரிவினர்களான தனியார் மற்றும் பொதுத்துறையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பயண எரிபொருள் அனுமதி மற்றும் வாகனம் அல்லாத வகைகளுக்கு அடுத்த வாரம் முதல் QR முறை அறிமுகப்படுத்தப்படும்.