தேசிய சபைக்கு ஒப்புதல்

135 0

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 37 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபைக்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை தணிக்கும் வகையில், ´தேசிய சபை´ அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

அந்த உடன்படிக்கையின்படி, சபாநாயகர் தேசிய சபையின் தலைவராகவும், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாளர் ஆகியோர் அதிகாரபூர்வமாக அதன் உறுப்பினர்களாகவும் ஆவர்.

தேசிய சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 ஆகும், இதில் பாராளுமன்றத்தில் செயல்படும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இது தொடர்பான பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.