கல்கிசையில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை

87 0

கல்கிசை, படோவிட்ட பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (3) இரவு 52 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து ஒருவரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மிகையாகியதையடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் அதன் பின்னர் சந்தேகநபர் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.