யேர்மனி ஸ்ருட்காட் சிறீ சித்தி விநாயகர் கோவில் நிதியுதவியில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.

354 0

யேர்மனி ஸ்ருட்காட் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி 20.8.2022 அன்று சனிக்கிழமை இதற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினை ஈடுசெய்யும் முகமாக தற்சார்புப் பொருளாதாரத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவல்தோட்டம் கிராமத்திலுள்ள 105 குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான பயிர்விதைகள் வழங்கப்பட்டன. இவ்வுதவிகளைப் பெற்ற மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதோடு யேர்மனி ஸ்ருட்காட் -அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் நிர்வாகம் மற்றும் தமிழ் மக்களுக்கும் அகம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.