அரசாங்கத்தின் செயல்பாடுகள் சரியானதல்ல

457 0

தேர்தலை பிற்போடுவது சம்பந்தமாக வரும்நாட்களில் எதிர்ப்பை வெளியிடுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

தேர்தல் பிற்போடப்படுவதன் காரணமாக உள்ளுராட்சி நிறுவனங்கள் தற்போது செயலற்று போயுள்ளதாக அவர் கூறுகின்றார்.

தங்காளை, கால்டன் வீட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் ஒன்றியத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு தொடர்பாக அரசாங்கத்தின் செயல்பாடுகள் சரியானதல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.