நாளை முதல் 10 ஆம் திகதி வரை ஒரு மணித்தியால மின்துண்டிப்பு

107 0

நாட்டில் நாளை 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், சகல வலயங்களிலும் மாலை 6 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இடையில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.