அதிசொகுசு பஸ்களில் முறையற்ற கட்டண அறவீடு – வடக்கு ஆளுநர் விசேட கவனம்

239 0

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிக்குச் செல்லும் அதேபோன்று அங்கிருந்து கொழும்பு திரும்பும் அதிசொகுசு பஸ்களில் முறையற்ற வகையில் கட்டணங்கள் அறவீடு செய்யப்படுவது வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சாதாரண பொதுமக்கள், தமது பயணங்களுக்கான ஆசன முற்பதிவினைச் செய்வதற்கு முயன்றபோது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக தொகை கோரப்பட்டுள்ளதாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

குறிப்பாக, முற்பகுதியில் இருக்கைகளை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட சூட்சுமங்களையும் அவர்கள் பயன்படுத்தி கூடிய தொகையை அறிவிடுவதற்கு முயற்சித்ததோடு சமகாலத்தில் காணப்படும் வாகனப் பயணங்களின் வீழ்ச்சியையும் பயன்படுத்தி இவ்வாறு எல்லையற்ற வகையில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசன முற்பதிவு செய்யும் முகவர்களுடன் பயணிகள் மேற்கொண்ட ஒலிப்பதிவுகளும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிiயில குறித்த ஆளுநர் கருத்து வெளியிடுகையில் வடக்கிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பயணிகள் பஸ்களும்ரூபவ் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை அறவிடுமாறு நான் வலியுறுதுகின்றேன்.

மேலும், இவ்விதமாக செயற்படுவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விசேட கரினை என்றார்.