இரண்டு தரப்புக்கும் நியாயமான தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ….

262 0

நாட்டின் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தரப்புக்கும் நியாயமான தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா அக்கரபத்தனை வூட்வில் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது தோட்ட கிராமத்தை தொழிலாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இன்று நடந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மாத்திரமல்லாது சுகாதாரம் மற்றும் தோட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கற்றல், கற்பித்தலையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.