வர்த்தக நிலையங்களை மூடாதீர்கள் – அமைச்சர் மனோ

655 0

mano-ganesan_01வற் என்று அறி­யப்­பட்­டுள்ள பெறு­மதி சேர்க்கை வரி முறைமைக்கு எதி­ராக தலை­ந­கரில் இன்று வர்த்­தக சமூகம் முன்­னெ­டுக்கும் எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ அர­சாங்­கத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளாக திசை திருப்­பப்­பட்டு விடக்­கூ­டாது என்­பதில் நீங்கள் கவ­ன­மாக இருங்கள்.எனவே அர­சாங்­கத்­துக்கு எதி­ராக போராட்டம் நடத்­த­வேண்டாம்.

வர்த்­தக நிலை­யங்­க­ளையும் மூட­வேண்டாம் என்று கோரு­கின்றேன் என ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.

எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில் இன்று ( நேற்று) மாலை தன்னை சந்­தித்த கொழும்பு வர்த்­தக சமூக பிர­தி­நி­தி­க­ளுடன் உரை­யா­டிய அமைச்சா் மனோ கணேசன் மேலும் கூறி­ய­தா­வது,

எமது அர­சாங்­கத்தை கவிழ்த்­து­விட காத்­தி­ருக்கும் இன­வாத அணிக்கு நாம் ஒரு­போதும் துணைபோய் விடக்­கூ­டாது. அதே­வேளை இந்த வற் வரி­வி­திப்பு தொடர்பில் வர்த்­தக சமூ­கத்தின் மன­வு­ணர்­வு­க­ளையும், நிலைப்­பா­டு­க­ளையும் நான் நன்கு புரிந்­துக்­கொண்­டுள்ளேன். கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறை­யிலும், அமைச்சர் என்ற முறை­யிலும், உங்கள் கருத்­து­களை உரிய இடங்­க­ளுக்கு கொண்டு சென்­றுள்ளேன்.

புதிய பெறு­மதி சேர்க்கை வரி முறைமை தொடர்பில் நாம் தற்­ச­மயம் அர­சாங்­கத்­துக்குள் முன்­னெ­டுக்கும் உள்­ளக மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு, உங்கள் கருத்­துகள் மேலும் வலு சேர்க்கும்கடந்த காலங்­களில் இருக்­காத, கடை­களை மூடி தெருவில் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தும் சுதந்­தி­ரத்தை வர்த்­தக சமூ­கத்­துக்கு எமது அரசு இன்று பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது. கடந்த அரசை வீழ்த்தி, இந்த அரசை அமைக்க நீண்­ட­காலம் பெரும் பாடு­பட்­டவன் என்ற முறையில் இதை­யிட்டு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்.

இன்று ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார சிக்கல் கடந்த அரசில் இருந்து நாம் பெற்­றுக்­கொண்ட சீதனம் ஆகும். இதில் இருந்து நாம் வெகு விரைவில் மீள்வோம். புதிய வரி­வி­திப்பு முறை­மையில் மறு­சீ­ர­மைப்பு கொண்டு வரு­வது தொடர்பில் நாம் இப்­போது கவனம் செலுத்தி வரு­கிறோம். விரைவில் நல்ல செய்தி வரும்.

எனவே அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தவேண்டாம். வர்த்தக நிலையங்களையும் மூடவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கின்றேன். விரைவில் நல்லது நடக்கும்.