சாதனை படைத்த மாணவிகளுக்கு டெனீஸ்வரன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிக் கௌரவித்துள்ளார்

270 0

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளுக்கு வடக்கு மாகாணத்தின் மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிக் கௌரவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட ரோல் போல் அணியினர் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப்பெற்றதோடு அவ்வணியின் 03 பாடசாலை மாணவிகள் சர்வதேச மட்டத்தில் பங்களாதேஷ் நாட்டில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண ரோல் போல் போட்டிகளுக்கு, இலங்கை அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சாதனையை நிலைநாட்டி, இலங்கை அணிக்கு தெரிவாகிய மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று மதியம் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.