மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எதிராக காலிமுகத்திடல் போராட்டம் தொடரும் – போராட்டக்காரர்கள்

174 0

காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னரும் ஜனாதிபதி செயலகத்தை எமது கட்டுப்பாட்டில் வைத்தவாறே போராட்டத்தை தொடர்ந்து நடத்தவுள்ளோம்.

எவரும் மக்களின் பக்கம் இல்லையென்பதை இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் நீரூபித்துள்ளன.

மக்களுக்கு எதிரானவரை ஆட்சியாளராக நியதித்துள்ள நிலையில், போராட்டம் தொடர்கின்றது.

இந்த போராட்டத்தின் மூலம் தேவையான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை அடைய நாங்கள் எண்ணியுள்ளோம் என அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.