காலிமுகத்திடலில் உள்ள பண்டாரநாயக்கா சிலைக்கு அருகில் செல்லத் தடை

114 0

காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ;பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு – காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் அங்குள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் இவ்வாறு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த தடையுத்தரவு இன்று (20) ;விதிக்கப்பட்டுள்ளது.

சிலைக்கு சேதம் விளைவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.