பாராளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜனபெரமுனவின் பிடியில் அதனை கலைக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணையை இழந்த பொதுஜனபெரமுனவின் பிடியிலேயே இன்னமும் தான் உள்ளதை மீண்டும் பாராளுமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பதை மீண்டும் தெரிவிக்கின்றேன்.
டலஸிற்கு வெளிப்படையாக ஆதரவை வெளியிட்டவர்களின் எண்ணிக்கை 113வை விட அதிகம் அவர்களிற்கு என்ன நடந்தது என ஜேவிபியின் தலைவர் முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.