வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்(காணொளி)

272 0

நிப்பொன் நிறுவனத்தால் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன.

யப்பான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் நிப்பொன் நிறுவனத்தால் இன்று வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் வங்கிப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாகவிகாரை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிப்பொன் நிறுவம் 30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் கல்வி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.

ஒவ்வொரு வருடமும் 20 ஆயிரம் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு பாடசாலை உபகரணங்கள் மற்றும் வங்கிப்புத்தகங்கள் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.