கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச பிடியாணையை பிறப்பிக்கவேண்டும் – பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்

181 0

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச பிடியாணையை பிறப்பிக்கவேண்டும் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர்சேர் எட் டேவி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.கோத்தபாய ராஜபக்சவையும் அவரது குழுவினரையும் கைதுசெய்வதற்கான சர்வதேச பிடியாணையை பிறப்பிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் மிகமோசமான நிலைக்கு ராஜபக்ச அரசாசாங்கத்தின் ஊழலும் வரிச்சலுகையும் மிகவும் அதிகமான பாதுகாப்புசெலவீனங்களும் பொலிஸாருக்கு அளவுக்கதிகமான அதிகாரங்களுமே காரணம் என அவர் பிரிட்டனின் பொதுச்சபையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனநாயகவாதிகளிற்கு ஆதரவளிப்பதற்காக இலங்கைக்கு முழுமையான பொருளாதார அரசியல் தீர்வை வழங்குவதற்காக பிரிட்டன் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் மற்றும் ஏனையவர்களுடன் இணைந்து நாங்கள் உடனடி ஆதரவை ஆரம்பிக்கவேண்டும்,அதில் கோத்தபாய ராஜபக்சவையும் அவரது சகாக்களையும் கைதுசெய்யும் சர்வதேச பிடியாணை உட்பட அரசியல் விடயங்களை உள்ளடக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் பொதியில் தமிழர்கள் முஸ்லீம்கள் உட்பட அனைவரினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்என்பதை உள்ளடக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.