அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை, அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்-வியாபாரிகள் சங்கம்

260 0

இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக் கட்டுப்பாடு காரணமாக நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த இந்த அரிசி விலைக் கட்டுப்பாட்டினால் பல சிக்கல் நிலைமை உருவாகும் எனவும் அச்சங்கத்தின் தலைவர் பந்துல ஜயமான்ன கூறியுள்ளார்.

இதேவேளை, தாமதித்தாவது அரசாங்கம் விலைக் கட்டுப்பாட்டை நிர்ணயித்தமை, நுகர்வோருக்கு நன்மை பயக்கும் எனவும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் அரிசி விலை குறைப்பு நடவடிக்கை குறித்து வினவிய போதே இவ்வமைப்புக்கள் இவ்வாறு கூறியுள்ளன.