விமல் வீரவங்ச தொடர்ந்தும் விளக்கமறியல்

226 0

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம், 9 கோடி ரூபா நஸ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் விமல் வீரவங்ச, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து எதிர்வரும் 20ம் திகதி வரை முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.