பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு

124 0

பஸ் கட்டணத்தை இன்று (30) நள்ளிரவு முதல் 22 சதவீதத்தால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்தை திருத்தும் தேசிய கொள்கையின்படி, ஒவ்வொரு வருடமும் ஜூலை 1ஆம் திகதி பஸ் கட்டணத்தை திருத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படியே, இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப, இவ்வாண்டு மாத்திரம் நான்கு முறை பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.