வர்த்தமானியில் வெளியானது அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம்

155 0

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்க கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையிலேயே தற்போது அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.