ரெட்ட உள்ளிட்டோர் விளக்கமறியலில்…

149 0

கடந்த 9 மற்றும் 10 திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று பொலிசில் சரணடைந்த 7 பேரும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரெட்ட எனும் ரத்திந்து சேனாரத்ன மற்றும் லஹிரு வீரசேகர உட்பட 7 பேர் இவ்வாறு சரணந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 7 பேரும் மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.