நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது யார் – வாசுதேவ நாணயக்கார விளக்குகிறார்.

200 0

ஐக்கிய தேசிய கட்சியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவும் இணைந்து, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எஹலியகொடயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியும் சந்திரிக்காவும், சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நாட்டின் பெறுமதியான வளங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.