விடுதலைப் புலிகளின் சுதந்திரத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது -பந்துல குணவர்தன

266 0

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை தவிர்த்து விட்டு விடுதலைப் புலிகளின் சுதந்திரத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு கொழும்பு வெலிகடை புதிய மெகசீன் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையின் சுதந்திரத்தினை தொடர்ந்தும் நிலைத்திருக்க பாடுபட்டு உழைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரை விரட்டி அடிப்பதன் மூலம் நாட்டுக்கு ஒருபோதும் சுதந்திரம் கிடைத்தது என கூற முடியாது.

இவ்வாறு நாட்டுக்காக உண்மையான மற்றும் தேசத்தின் சுதந்திரத்திக்காக படுபட்டவர்களை விடுத்து, விடுதலைப் புலிகளின் சுதந்திரத்திற்காக மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.