யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

166 0

யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் 11 ஆம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் – பேருந்தும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து புன்னாலைக்கட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து கோப்பாய் – மானிப்பாய் வீதியில் உரும்பிராய் சந்தியில் சடுதியாக வீதியை கடக்க முயற்சித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.