கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த கூட்டம் காலியில்………………..

257 0

கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த கூட்டம் காலியில் நடத்தப்பட உள்ளது

கூட்டு எதிர்க்கட்சியினால் “மாற்றத்தின் ஆரம்பம்” என்ற தொனிப்பொருளில் பேரணிகளும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனொரு கட்டமாக அடுத்த மாத ஆரம்பத்தில் காலியில் இவ்வாறான ஓர் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

காலி நகரில் அடுத்த கூட்டத்தை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே கொழும்பு வார இறுதி ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

அரசாங்கம் மக்கள் விரோத ஆட்சியை நாட்டில் முன்னெடுத்து வருகின்றது.

அரசாங்கத்தின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

அனதன் காரணமாக காலி கூட்டத்தின் பின்னர் வேறு பல மாவட்டங்களிலும் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளை வலுப்பெறச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.