குற்றம் இழைக்காதவர்கள் சிறையில் – பந்துல

244 0

குற்றம் இழைத்தவர்கள் சிறைக்கு வெளியில் உள்ள நிலையில், அரசாங்கம் பொது மக்களை சிறைப்பிடிப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தினார்.

வாகன முறைக்கேடு தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசங்சவை நேரில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மத்திய வங்கியின் நிதி முறியுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை.

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பவில்லை.

இந்தநிலையில், மாறாக தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர்; பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.