காளஹஸ்தி கோயிலில் தீ விபத்து

262 0

காளஹஸ்தி சிவன் கோவில் யாக சாலையில் நேற்று(4) மாலை ‘திடீர்’ தீ விபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் ராஜகோபுரம் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி இடி தாக்கி இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து புதிய ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடந்து வந்தது.

அந்த பணிகள் நிறைவடைந்ததையொட்டி வரும் 8-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னர் புதிய ராஜகோபுரத்திற்கு 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த வியாழக்கிழமை புதிய ராஜகோபுரத்திற்கு காலை 8 மணியில் இருந்து 9.30 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.