டிலான் பெரேராவுக்கு எதிராக 500 மில்லியன் நட்டயீடு கோரல்

423 0

ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிராக 500 மில்லியன் நட்டயீடு கோரி, வழங்கு தொடரப்போவதாக மாலபே தனியார் மருத்து கல்லூரியின், பெற்றோர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு தொடர்பில் அண்மையில் கெமுனு விஜேரத்ன கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு எதிராக, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா நேற்று பதுளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு எதிர்கருத்து வெளியிட்டிருந்தார்.

டிலான் பெரேரா இந்தன்போது வெளியிட்ட கருத்துக்கள் தனக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறியே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபோவதாக மாலபே தனியார் மருத்து கல்லூரியின், பெற்றோர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.