அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்தியர் ஒருவர் கைது

412 0

அலரி மாளிகையையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்த 36 வயதுடைய இந்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதந்திர தின நிகழ்வுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த அழகை ரசிப்பதற்கு இவ்வாறு படம் பிடித்ததாக பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர் வத்தளை பிரதேசத்தில் குடியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.