சட்டவிரோத மதுபானம் தயாரித்த நால்வர் கைது

174 0

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக ஹீன கிடியன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக தயாரித்த 472 லீட்டர் மதுபானம் மற்றும் 19,687 லீட்டர் கோடா உட்பட சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21,28,35 மற்றும் 53 வயதுடைய மினுவங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.<