பகிடிவதை தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது

224 0

மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்தமை தொடர்பில் வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய வளாக மாணவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர் ஒருவர் மீது வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய வளாக மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மாணவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற சில மாணவர்கள் அங்கிருந்து காவலாளியும் அம்மாணவரையும் தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதன் போது மாணவர்களினால் தாக்குதலுக்கு இலக்கான 52 வயதுடைய குளியாப்பிட்டிய சேர்ந்த  விடுதியின் காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு மாணவர் 100,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.