உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் குண்டுதாரிகள் இருவரின் தந்தையை பிணையில் விடுதலை

233 0

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் குண்டுதாரிகள் இருவரின் தந்தையை பிணையில் விடுதலை செய்து கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் குண்டுதாரிகள் இருவரின் தந்தையான மொஹம்மட் இப்ராஹீம் என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பில் உள்ள இரண்டு முக்கிய ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கும் மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகிய சகோதரர்களே பிரதான சூத்திரதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.