அரசாங்கத்துக்கு காணாமல்போனவர்கள் குறித்து பொறுப்புகூற வேண்டிய கடப்பாடு

235 0

காணாமல்போனவர்கள் குறித்து பொறுப்புகூற வேண்டிய கடப்பாடு, தற்போதைய அரசாங்கத்துக்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் என்பது இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களை குறிக்கின்றது.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் பொது மக்களுக்கு கூற வேண்டும். கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல வாய்ப்பில்லை.

அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தால் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட காலம் உள்ளிட்ட விபரங்களை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.