ஜனநாயகத் தன்மை மேலும் அதிகரிப்பது அவசியம் – மஹிந்த

240 0

அரசாங்கம் இதனை விட ஜனநாயகத் தன்மை கொண்டதாக செயற்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த வருடத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் இடம்பெறாது என அரசாங்கம் கூறுகிறது.

தேர்தல் நடத்தப்படாமையானது ஜனநாயகத்திற்கு முரணானது.

அரசாங்கம் தேர்தல்களுக்கு முகங்கொடுக்க அஞ்சக்கூடாது என அவர் தெரிவித்தார்.

அத்துடன், தேர்தல்கள் மூலம் அரசாங்கத்தின் ஜனரஞ்சக தன்மையை அறிந்து கொள்ள முடியும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.