கடந்த ஆட்சியை போன்றே தற்போதைய ஆட்சியிலும் ஊழலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களுக்கு அமைய தீர்மானங்கள் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்;திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிலர் அரசாங்கம் 10 வருடங்கள் பழமையானது என்று எண்ணுகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் இன்னும் புதியது.
யுத்தத்தின் பின்னர் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் இருந்தன.
அவற்றிற்கு தீர்வு காண இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் மக்கள் விரும்பினால் அன்றி வேறு யாராலும் நல்லாட்சியை வீழ்த்த முடியாது என்றும் ஜனாதிபதி மைத்;திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.