சொலமன் தீவில் இலங்கையர் குறித்து விசாரணை

297 0

சொலமன் தீவுகளில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில் இலங்கையர் ஒருவருக்கு எதிரான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சொலமன் – ஹொனியரோன் பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி அவர் இந்த விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த விசாரணை முழுதாக கைவிடப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் விசாரணை செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்அடிப்படையில் குறித்த விபத்து தொடர்பான விசாரணை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.