நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள்  கைது (காணொளி)

400 0

 

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் படகு ஒன்றும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று இரவு 7 மணியளவில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா ஜெகதாபட்டணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐவரும், கடற்படையினரால் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளநிலையில் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.