வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிலுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி நேற்று பாடசாலை அதிபர் திரு.ஓங்காரமூர்த்தி தலைமையில் பாடசாலை மைதனத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் முதன்மை விருந்திரனாக கலந்;துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பிர் சிவஞானம் சிறிதரன் நெடுந்தீவு மண்ணில் பிறந்தவர்கள் வரலாற்றில் பல பதிவுகளை மேற்கொண்டு அடையாங்களோடு இன்றும் இலங்கையிலும் பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நவீன தொழிலுட்பத்தை நோக்கி தற்போது உலகம் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும் இதற்கேற்ப எங்களை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்;டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நவீன தொழிலுட்ப வளர்ச்சியூடாக கல்வியில் முன்னேற்றம் கண்டு எமது இலக்கை அடைய வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.