வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

293 0

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் கட்டடம் ஒன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையின் வகுப்பறை கட்டடத் தொகுதி மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் என்பன திறந்து வைக்கப்பட்டன.

வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் அதிபர் திருமதி.தியாகசோதி யுவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆரம்ப பாடசாலை மாணவர்களால் விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பான்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டனர்.அதிதிகளால் கட்டடம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது ஆரம்ப பிரிவு மாணவர்கள் விளையாட்டு திடலிலும் விளையாடியதை காணமுடிந்தது.