யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைது(காணொளி)

256 0

யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவரை, வாள்களுடன் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

18 வயது தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து வாள்கள், மோட்டார் சைக்கிள்கள், கையடக்கத் தொலைபேசி என்பனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக பரவலாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்களுக்கும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.