பிணை கோரி விமல் வீரவன்ச உயர்நீதிமன்றில் மனு!

254 0

கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பிணை கோரி மனு ஒன்றினை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

விமல் வீரவன்சவின் சட்டத்தரணி மூலம் திருத்தப்பட்ட மனுவொன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தெரிவித்துள்ளார்.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.