சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோதாபய ராஜபக்ஷ!

350 0

சீனாவின் பல்கலைக்கழகமொன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டுக் கற்கை நெறியொன்றைக் கற்பதற்கு சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கற்கைநெறியைப் பயில்வதற்கு, முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட நடத்தும் பாத் பைன்டர் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தினூடாக கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சிறீலங்காவில் அரசியல் முகாமைத்துவம் தொடர்பாக, பாத் பைன்டர் நிறுவனம், சீனாவின் தற்கால அனைத்துலக உறவுகளுக்கான நிறுவகத்துடன் உடன்பாடு ஒன்றை செய்துள்ளது.

இந்நிலையிலேயே மிலிந்த மொறகொடவும், ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவரும், கோத்தாபய ராஜபக்ஷவை சீனாவில் குறித்த அரசியல் கல்வியைத் தொடருமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.