இலங்கை டெலிகொம் மேன்பவர் ஊழியர் சங்கத்தின் உப தலைவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

249 0

இலங்கை டெலிகொம் மேன்பவர் ஊழியர் சங்கத்தின் உப தலைவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஊழியர் சங்கத்தின் உப தலைவரான எஸ். மங்கள காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் உள்ள டெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த மங்கள, கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வீட்டுக்கு வருவதாக கூறி, உண்ணவிரதப் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

எனினும் அன்றைய தினத்தில் இருந்து அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என மனைவி மேற்கொண்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.