மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் பெப்ரவரியில் ஆரம்பம்

256 0

மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளின், குருணாகல் பகுதிக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நிர்மாணப் பணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.சி.திசாநாயக்க தெரிவித்தார்.

உள்ளுர் ஒப்பந்தக்காரர்கள் மூலம் இந்த நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.